ராசிபுரம்: மல்லூர் அருகே அரசு டவுன் பஸ், மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர்கள் இருவர் பலியாயினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மலையாம்பாளையம் அருகே குறுகிய சாலை வழியாக சென்றது. அப்போது, பஸ் வளைவில் திரும்பிய போது, அங்கிருந்த மின் கம்பத்தில்
ஈரோடு: ஈரோடு அருகே குடித்து விட்டு மாணவர்களிடம் தகராறு செய்த இரு போலீஸ்காரர்களை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.பெருந்துறை காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் மேகநாதன். இதேபோல சித்தோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஞானசேகரன். இருவரும் சீருடை இல்லாமல், குடித்து விட்டு போதையில் நடந்து வந்தனர். வெள்ளோடு பகுதிக்கு
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டத் துடிக்கும் கேரள அரசைக் கண்டித்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கொடும்பாவியை எரித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.மதுரையில், மாவட்ட கோர்ட் முன்பு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கூடினர். கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதைக் கண்டித்து கோஷமிட்டனர்.
மதுரை: மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் கேபிள் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு கலர் டிவி மற்றும் டிவிடி பிளேயர் வழங்கப்பட்டு வருகிறது.பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் காண்போம், கற்போம் நிகழ்ச்சியை மாணவ, மாணவியருக்கு காட்டுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை
சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில், சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும்
வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்தும், கல்லூரி விடுதியை சூறையாடியும் அக்கிரமம் செய்த 28 சீனியர் மாணவர்கள் கல்லூரியை விட்டு அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, ராகிங் செய்ததை கல்லூரி முதல்வரிடம் சொல்லியதற்காக முதலாமாண்டு படித்த மாணவர்களை,
மலப்புரம்: கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், ஹரிகோடாவில் உள்ள சாளியாற்றில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் 8 முதல் 15 வயது சிறுவர்கள். விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 40 பேர் இருந்துள்ளனர்.ஹரிகோடாவிலிருமந்து சாளியாற்றின் வழியாக அருகில் உள்ள ஊருக்கு இவர்கள் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சமீபத்தில் தான் தேக்கடியில்
சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை