புதுடெல்லி: தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட இலக்கை அடைய போதிய உபகரணங்களும், திறமையான பணியாளர்களும் இல்லை என்று டெல்லி மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடப்பு
சென்னை: மதுரையில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப துணை மையமும், மேலூரில் அரசு பாலிடெக்னிக்கும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், தென் மாவட்டங்களின் மீது அரசும், தொழில் நிறுவனங்களும் சமீபகாலமாக சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மதுரை உள்ளிட்ட நகரங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான மழையளவை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.மாநிலத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 7 நாட்களில் பதிவான சராசரி மழையளவு 274.9 மில்லி மீட்டரை எட்டியது.கடந்த 7 நாட்களில் மாவட்டம் வாரியாக பெய்துள்ள மழையளவு விவரம்: சென்னை மாவட்டத்தில் மழையளவு 407.9
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நகரங்களில் சுமார் 3 மணி நேரமும், கிராமப்புறங்களில் சுமார் 6 மணி நேரமும் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் உற்பத்தி குறைவு தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.வழக்கமாக 1400 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து தந்த காற்றாலைகள் தற்போது 400 மெகா
கூடலூர் : மக்களின் பாதுகாப்புக்காக கேரள வனப்பகுதியில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.முல்லைபெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம்
காஞ்சிபுரம்: போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி மிச்சமடைந்துள்ளதாக உணவு துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,போலி ரேஷன் கார்டுகளை தமிழகத்தில் இருந்து ஒழிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல்வர் கருணாநிதியின் உத்தரவின்
திருப்பூர்: தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட 20 மனுக்கள் குறித்து மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி விசாரணை நடத்தினார்.பின்பு, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,கடந்த 2006 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட்
டெல்லி: இந்திய அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்த தகவலை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:உள்நாட்டு சுற்றுலாவில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவில் தான்
மதுரை: தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி மகளிர் சுய உதவி குழுக்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்ள வங்கிகள் மூலம்
திருவாரூர்: தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிட சாதாரண மக்களுக்கு எதிராக அதிகமாக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக் கூட்ட‌ம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வரதராஜன் பேசுகையில்,இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல