கொல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்ததில், ரயில் தடம் புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.டாடா - பிலாஸ்பூர் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு மனோஹர் - பசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தது.அப்போது
ஜாம்நகர்: ஆளில்லாத ரயில்வே கேட்டில் ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜலியா ரயில் நிலையத்துக்கு அருகே ஆளில்லாத லெவல் கிராஸிங் ஒன்று உள்ளது. இன்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஆட்டோ ஒன்று கடக்க
சென்னை: விழாக்கால கூட்ட நெரிசலைத் தவி்ர்க்க சென்னையி்ல் இருந்து நாகர்கோவில் மற்றும் செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழன்தோறும் இயக்கப்படும் ரயில் (0637), எழும்பூரிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். மறுநாள் பகல் 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் மதியம் 1.30க்கு
சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் கிளம்பவிருந்த ரயிலின் ஏசி பெட்டியிலிரு்நது திடீரென புகை வெளிவந்ததால் பீதியடைந்த பயணிகள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.
புனே: அஜ்மீரில் இருந்து மைசூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர். மராட்டிய மாநிலம் புனே அருகே ஜிஜூரி பகுதியில் நேற்றிரவு வந்து கொண்டிருந்த போது மைசூர்-அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி புரண்டன. இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் அலறினார்கள்.
சென்னை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து திருச்சி மார்க்கமாகவே இயக்கப்படும் என ரயில்வே புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரயில் படிப்படியாக தினசரி சேவைக்கு மாற்றப்படும் என தெரிகிறது.வாரந்தோறும் திருச்செந்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வருகிறது. மயிலாடுதுறை- விழுப்புரம் அகலபாதைப்
தைபே: தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவான் நாட்டின் மத்தியப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி மாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைலநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளும் அதிர்ந்தன.இதையடுத்து அந் நாட்டின் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று
தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் இவர் குமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பயிற்சிக்காக சென்னை சென்று வந்தார்.நாகர்கோவில் வரும்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க
மித்னாபூர்: ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.மேலும் கடத்திச் செல்லப்பட்ட என்ஜின் டிரைவர் அனந்தராவ், துணை டிரைவர் கே.ஜே. ராவ் ஆகியோரையும் விடுதலை செய்தனர்.நக்ஸல்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசும் பிற மாநில அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகளை உடனே
கொல்கத்தா: புவனேஸ்வர்-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திய நக்ஸலைட்டுகள், அதன் டிரைவரை கடத்திச் சென்றுவிட்டனர்.மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.ஜர்கிராம்- சார்டியா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது சிவப்புக் கொடிகளைக் காட்டி ரயிலை நக்ஸலைட்டுகள் நிறுத்தினர்.தண்டவாளத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைத்து ரயிலை டிரைவர் நிறுத்தினார்.