டெல்லி: பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டு சிஐஏ தலைவர் லியான் பனீட்டா, இன்று காலை டெல்லி வந்தார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அவர் சந்தித்துப் பேசினார்.சிஐஏ தலைவர் லியான் பனீட்டா பாகிஸ்தான் நேற்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கன் நிலவரம் குறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி,
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், மறுகுடியமர்த்தும் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று ஐ.நா. மனிதாபிமான பிரிவு துணைச் செயலாளர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்த ஜான் ஹோம்ஸ் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கடந்த
கொழும்பு: வன்னியில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாம்.மேலும் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களை சந்திக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நாளை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய இடங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதிநிதிகளும் அரசால் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.வன்னி மாவட்ட
டெல்லி: இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக சூறாவளிப் புயல் வலுப்பெற்று வரும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், அவசர அவசரமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்று கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.இலங்கை செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வந்த அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சொல்லியனுப்பி விவரங்களைப் பகிர்ந்து
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார்.அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது.இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக
தவாங் (அருணாச்சல் பிரதேசம்): அருணாச்சல் பிரதேசத்தை ஒருபோதும் சீனா உரிமை கொண்டாட முடியாது. நான் சீனாவுக்கு எதிராக நடப்பதாக அவர்கள் கூறுவதிலும் ஆச்சரியம் இல்லை, அது வழக்கமான பிரசாரம்தான் என்று கூறியுள்ளார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா.நான்கு நாள் பயணமாக இன்று தவாங் வந்தார் தலாய் லாமா. இவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
டெல்லி: ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இன்று முதல் இங்கிலாந்து மற்றும் சைப்ரஸ் நாடுகளில் ஒருவாரம் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.இன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் அவர் இங்கிலாந்து கிளம்பினா்.முதலில் லண்டன் செல்லும் அங்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் இருந்து டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியைப் பெற்றுக் கொள்வார்.பிரதீபாவின் வருகையையொட்டி நாளை பங்கிங்காம் அரண்மனையில் பாலிவுட்
மேட்டூர்: வீரப்பனின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மேட்டூர் அருகே மூலக்காட்டில் உள்ள சமாதியில் அவரது மகள்கள் அஞ்சலி செலுத்தினர்.இந் நிலையில் கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர் அருகே உள்ள சந்தியூரில் வீரப்பனின் குலதெய்வமான முனியப்பன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரோ எருமை கன்றுக்குட்டியை பலியிட்டுள்ளனர்.சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி
ராஞ்சி: உங்களைப் போலவே நானும் எனது தந்தையை இழந்தவன்தா என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினரிடம் கூறி ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.இந்துவாரின் மனைவி மற்றும் குழந்தைளை
சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை இல்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு