மும்பை: யார்ட்லி நிறுவனத்தின் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் ஆஸ்திரலேஷிய பிரிவின் வர்த்தக உரிமையைப் பெற்றுள்ளது விப்ரோ நிறுவனம்.இதற்காக விப்ரோவின் நுகர்வோர் பொருள் மற்றும் லைட்டிங் வர்த்தக பிரிவு 45.5 மில்லியன் டாலர்களை யார்ட்லி தயாரிப்பாளர்களான லோர்னமீட் குழுமத்துக்கு செலுத்துகிறது. இந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவு செய்துள்ள மிகப்பெரிய இணைப்பு நடவடிக்கை இது.
பெங்களூரு: விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறைய புதிய அவுட்ஸோர்ஸிங் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் விப்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிசிஎஸ், இன்போஸிஸ் நிறுவனங்களுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம் விப்ரோ. இதன் மொத்த
பெங்களூர்: சாப்ட்வேர் ஜாம்பவான் விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஜெர்மனியின் அகாடெக் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஹென்னிங் கேகர்மேன் இணைகிறார்.இதுகுறித்து விப்ரோ தலைவர் ஆசிம் பிரம்ஜி கூருகையில், டாக்டர் கேகர்மேனை எங்களது இயக்குநர் குழுவில் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய மூன்றிலும் அனுபவம் பெற்றவர் கேகர்மேன்.அவரது ஆழமான அறிவு மற்றும்
பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.சில தினங்களுக்கு முன்புதான் முக்கிய ஐடி நிறுவனமான விப்ரோ, தனது பணியாளர்களுக்கு நிறுத்தி வைத்திருந்து சம்பள உயர்வை வழங்க ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து நடுத்தர ஐடி நிறுவனங்களான எம்பஸிஸ்- இடிஎஸ், சோனாட்டா சாஃப்ட்வேர்ஸ் மற்றும்
விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.நுகர்வோர் பொருள்கள் விற்பனையிலும் இந்த நிறுவனம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் 5 சதவீகிதம் கூடுதல் வளர்ச்சியுடன் ரூ.6274 கோடியை எட்டியுள்ளது. ஆனால் விப்ரோவின்
வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான ரிலையன்ஸ் அனில் அம்பானி, விப்ரோ அஜீம் பிரேம்ஜி ஆகியோரை அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் (US India Business Council-USIBC) கவுரவிக்கிறது.வரும் ஜூன் 17-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் இந்த கவுன்சிலின் 34-வது ஆண்டு கூட்டத்தில் அனில் அம்பானிக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருதும், விப்ரோ ப்ரேம்ஜிக்கு 'குளோபல்
மும்பை: ஜிஎம் நிறுவனத்தின் திவால் அறிவிப்பு தங்கள் நிறுவனத்தைப் பாதிக்கவில்லை என விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 'அமெரிக்காவில் தேள் கொட்டினா இந்தியாவில் நெறிகட்டும்' என்ற புதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் எந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தாலும் அதன் முதல்பாதிப்பு தெரிவது இந்தியாவில்தான். காரணம் ஏதாவது ஒரு வகையில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகின்றன. பிபிஓ முறையில் பணிகளைச்
வாஷிங்டன்: எச்1பி விசா பெறுவோர் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முயன்றால் நஷ்டம் அவர்களுக்குதான். பல அறிவாளிகளை அவர்கள் இழக்க வேண்டி வரும். இதுவே பின்னாளில் ஒரு வர்த்தகப் போராக மாறும் சூழல் எழும் என்கிறார் விப்ரோ செயல் தலைவர் அஸீம் பிரேம்ஜி. பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸீம் பிரேம்ஜி கூறியிருப்பதாவது: என்னைப் பொறுத்தவரை இந்த
டெல்லி: இன்போஸிஸ் மூலம் ஐடி துறையில் பெரும் சாதனை படைத்த என் ஆர் நாராயணமூர்த்தி, புதிய நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடு அளி்ப்பவராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவிடம் ரூ.10000 பணத்தைக் கடனாகப் பெற்று இன்போஸிஸை ஆரம்பித்த நாராயண மூர்த்தி இன்று தனிப்பட்ட முறையில் 1.8 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரர். இன்றும் இன்போஸிஸின்
மும்பை: வேலைவாய்ப்பு அடியோடு குறைந்துவரும் இந்த நாட்களில் இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ மட்டுமே புதிய பணியாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றன அல்லது குறைந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றன என்று தகவல் வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை.இவை தவிர, சர்வதேச நிறுவனங்களில் பிரிட்டனின் டெஸ்கோ, ஃபின்லாந்து மொபைல் நிறுவனம் நோக்கியா, பிரிட்டனின் மெட்ரோ